Tuesday, September 4, 2007

மண்ணின் மைந்தர்கள்

நாங்கள் இந்தமண்ணின் மைந்தர்கள்முன் தோன்றியமூத்தகுடிகள்
மழைமேகக் காதலர்கள்மகிழ்ந்து பறவைகள்ஆலோலம் பாடும்சங்கீத மேடைகள்!
மணிநிழல் பரப்பும்மரகதக் குடைகள்மாடு ஆடுகளின்ஓய்வுக் கூடங்கள்மாணவர்களின்பாடசாலைகள்மழைலையரின்விளையாட்டுத் திடல்கள்
மண்வளம் காக்கும்பசுமைக் குடில்கள்மனம் கலந்த காதலர்கள்மறைந்திருந்து பேசும்ஒதக்குப் புறங்கள்
ஏழைகளின் அடுப்பெரியும்இலவச வீடுகள்இயற்கை நட்டுவைத்தஆச்சரியக் குறிகள்!
கொஞ்சம் மண்ணும்கொஞ்சம் நீரும்கொஞ்சம் ஒளியுமேஎங்களதுகுறைந்தபட்ச தேவைகள்!
கனிக் குலைகளால்விதை மணிகளால்விருந்தாவோம்உங்கள் பசிக்கு!
வேரால் விழுதால்பட்டைகளால்கொட்டைகளால்இலைகளால்ஈர்க்குகளால்மருந்தாவோம்உங்கள் நோய்க்கு!
கிளைக் கைளில்பூக்களைச் சுமந்துபுதுவசந்தங்களால்இந்தப் பூமியைஅழகுப் படுத்துவோம்!
நீங்கள் இளைப்பாறநிழல் பரப்புகளைப்பாறக்கவரி வீசுவோம்!
உங்கள் நாசிகளுக்குமூச்சுக் காற்றாவோம்!நீங்கள் விடும்நச்சுக் காற்றைநல்ல காற்றாகமாற்றும்சுத்திகரிப்புநிலையங்களாகி நிற்போம்!
மண்ணில் இருந்தாலும்விண்ணைத் தொடுவதேஎங்கள் இலட்சியம்!
முடிவின் தொடக்கமாய்மீண்டும் முளைத்தெழவிட்டுச் செல்வோம்வீரிய விதைகளைஉங்கள் கைகளில்!
இயற்கைக்குஎதிராகஆயுதங்களுடன்அலையும்மனித குலத்தீர்!
எங்களை அழித்துஉங்களைஅழித்துக் கொள்ளாதீர்!
நாங்கள்நிரந்தரமானவர்கள்அழிவதே இல்லை!
நாளைமனிதர்கள் இல்லாமல்உலகம் இருக்கலாம்மரங்கள் இல்லாமல்உலகம் இருக்குமா?

No comments: