Saturday, August 23, 2008

எனது கடமை

தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துக்களைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக் கொள்ளா விட்டாலும் நாளை ஒரு நாள் ஏஏற்றுக்கொள்ளும் நிலை வரும். இக்கருத்துக்களை சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன். சொல்ல வெண்டிய கருத்துக்களை நானே எழுதி,நானே அச்சுக்கோத்து, நானேஅச்சிட்டு, நானே படித்துக்கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடியரசை வெளியிட்டு என்கருத்துக்களை வரும் தலை முறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை. [குடியரசு-10.06.1929]
-தந்தைபெரியார்

Wednesday, August 20, 2008

சமரசம் என்ற பேச்சே இல்லை

எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது.
இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம்.
நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம்.
அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம்.
எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு புழுதிக்குள் புதையுண்டாலொழிய...
எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்.
இனி சமரசம் என்ற பேச்சே இல்லை.
எங்கள் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தேதீரும்.
-ரிவோல்ட் [3-11-1929]

Sunday, August 17, 2008

அறம்

அறம் என்றால் மக்களுக்கு தம்மாலான நல்லனவற்றைச் செய்வதுதான். அதுதான் உண்மையான தொண்டு. இதனை விடுத்து இந்த உலகத்தை விட்டு மோட்ச உலகம் செல்லவேண்டும் என்று கருதியோ, மற்றமுட்டாள் தனமான காரியங்களுக்கோ தொண்டு செய்வதனால் உண்மையான இன்பம் கிட்டாது.
-தந்தைபெரியார்

Friday, August 15, 2008

மொழி

எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால்! உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால்! உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது மொழி என்பதானது எனது லட்சியத்திற்கு-எனது மக்கள் முற்போக்கு அடைவதற்கு-மானத்தோடு வாழ்வதற்குப் பயன்படாது என்று கருதினால் உடனே அதி விட்டுவிட்டுப் பயனளிக்கக்கூடியதைப் பின்பற்றுவேன்.
-தந்தைபெரியார்

Tuesday, August 12, 2008

நமது இழிவு நீங்கி மேம்பாடடைய...

நமது சமுதாயத்தில் உள்ள ஒரு பெரிய குறை நமக் கென்று நமது இனத்திற் கென்று ஒரு தாபனம்,ஒரு தலைவன் இல்லாததே யாகும். எந்த உத்தியோகம் பார்த்தாலும் எந்தக் கொள்கை உடையவர்களாக இருப்பினும், எந்தச் சாதியைச் சார்ந்தவராக இருப்பினும் எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், தமிழன் என்றால் எல்லோரும் ஒன்றாகக் கூட வேண்டும். அதில் எந்தக் கருத்து வேறுபாட்டிற்கும் இடம் இருக்கக்கூடாது. ஆகவே தமிழர்கள் யாவரும் ஒன்று கூடும்படியான ஒரு தாபனம் வேண்டும் அதைத் துவக்க நீங்கள் முயற்சி எடுத்துக்கொள்ளவெண்டும். அந்த தாபனத்தில் தமிழர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக்க வேண்டும் அதற்குத் தமிழர் முன்னேற்றத் தாபனம் என்றோ, ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றத்தாபனம் என்றோ ஏதோ ஒரு பெயர் வைத்துக்கொண்டு தமிழர் அனைவரையும் அதில் உறுப்பினராக்க வேண்டும். தமிழர்களுக்கு எற்படும் குறைகளை அதன் மூலம் போக்கிக் கொள்ள முற்பட வேண்டும்.
-தந்தை பெரியார்

Sunday, August 3, 2008

தொண்டு

சமுதாயத் துறைக்குப் பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்
தந்தைபெரியார்