Thursday, July 31, 2008

இழிதன்மை

நம் வீட்டுக்குள் அந்நியன்புகுந்து கொண்டதோடல்லாது ,அவன் நம் எஜமான் என்றால் _நமக்கு இதை விட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்.
-தந்தைபெரியார்

Wednesday, July 30, 2008

மாறுதல்

காலத்துக்கு ஏற்ற மறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப்போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
-தந்தை பெரியார்

Tuesday, July 29, 2008

சாதி-தீண்டாமை ஒழிய

தீண்டாமையைப்பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலை நிறுத்தத்தான்சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயழியஇவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல. இதனாலேதான் நாம்தீண்டாமை ஒழிவுக்கு சாதியும், மதமும், தெய்வமும் ஒழிந்தாக வேண்டும் என்கிறோம். இம்மூன்றும் ஒழியப் போவதில்லை. தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை சாதி இருந்துதான் தீரும்.சாதி உள்ளவரை தீண்டாமை இருந்துதான் தீரும்
-தந்தை பெரியார்

Monday, July 28, 2008

பல துறைகளுக்கு

1. மக்களிடம் உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்படவேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி, நேர்மை ஏற்படவேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால்பத்திரிகைகள் பெரிதும் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்படவேண்டுமானால்தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்படவேண்டுமானால் லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறைஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில் துறையில் தொழிலாளர்களிடையே சுமூகமும், நாணயமும்,பொறுப்பும் ஏற்பட வேண்டுமானால் லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் சட்டம் ஒழிக்கப்படவேண்டும்.

7. அய்க்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை நீதிபதியாகநியமிப்பது ஒழிக்கப்படவேண்டும்.
- தந்தை பெரியார்

Friday, July 25, 2008

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

"மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் நீர் எடுக்கக்கூடாது; என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக்குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச்செய்யாமலோ,பூமிப்பிளவில் அமிழச்செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்கமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்."
-தந்தைபெரியார்

Thursday, July 24, 2008

இழிசாதித் தன்மை நீங்க

நமக்கு மந்திரி பதவியோ,கவர்னர் பதவியோ தேவையில்லை நமக்குத் தேவை எல்லாம் நமது இன இழிவு ஒழிப்பே. அது இந்த ஆட்சியால் முடியாது என்றால் இந்த ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டியது தான். ஒழித்துவிட்டு என்னசெய்வாய்? துலுக்கனையோ, ருசியக்காரனையோ,ஜெர்மன்காரனையோ, ஜப்பான்காரனையோ கூப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான்! நம்மை இழிசாதி என்று சொல்லாதவன் எவனாவது ஆண்டு விட்டு போகட்டுமே.
-தந்தைபெரியார்

Wednesday, July 23, 2008

பொதுத் தொண்டு

பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை
அவன் தன் லட்சியத்திற்குக்
கொடுக்கும் விலையாகும்.
-தந்தைபெரியார்

Monday, July 21, 2008

எனது உணர்ச்சி...

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு,அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்க்கை குணமாக இருக்குமோ அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத்தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப்போய்,வலிவு குறைவாய் இருக்கிற மகனுக்கு , மற்றக் குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையை விட எப்படி அதிக போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ,அது போலத்தான் நான் வலுக் குறைவான பின் தங்கிய மக்களிட்ம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும்,மற்ற வகுப்பு மக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சியாகும்.

-தந்தைபெரியார்

Saturday, July 19, 2008

ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்?

வான் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்?அதன் உச்சிக்கெல்லாம் தங்க முலாம் பூசியவர் யார்? தில்லை நடராஜனுக்கு தங்க கூரை வேய்ந்து தந்தவர் யார்? ஆங்காங்கு ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பித்தந்தவர் யார்? சத்திரம் சாவடி கட்டி வைத்தவர் யார்? ஒரு பார்ப்பானாவது ஒரு செல்லாக் காசாவது கோயில்,குளம்-தான தர்மம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க, இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்? அவர்கள் மட்டும் ஏன் ஒன்றும் செய்யாமலே நம்மை ஏமாற்றி உண்டு பிராமணர்களாய் வாழ வேண்டும்? நாம் ஏன் இன்று கடவுளையே குடுமியை பிடித்து ஆட்டுகிறோம்? ஏன்? அதனால் நல்லது உண்டாகவில்லை. இது சாமியா குழவிக்கல்லா என்று கூடத் துணிந்து கேட்கிறோம் . அது நட்டது நட்ட படியே நின்று கொண்டிருக்கிறதே-"ஆம் உண்மை உண்மை" என்று ஒப்புக்கொள்ளும் தன்மையில். இப்படியெல்லாம் சொல்வதற்காக எந்தச்சாமியும் நம்மீது மான நட்ட வழக்கு தொடரக்காணோமே!
-தந்தை பெரியார்

Tuesday, July 15, 2008

ஒழுக்கம் வளர...

யோக்கியர்களே அரசியல், பொதுவாழ்வுக்கு வரும்படியான நிலையை இன்னமும் நம்முடைய நாடு எய்தவில்லை. ஏதோ ஒரு சிலர் யோக்கியர்களும் இருக்க நேரலாம்; என்றாலும் அவர்கள் யோக்கியமாய் நடந்துகொள்ளமுடியாத சூழ்நிலையும்,யோக்கியமாய் நடந்து கொண்டாலும் பயன் எற்படாத சூழ்நிலையும் இருந்து வருவதனால் யோக்கியமாய் நடந்து கொள்வது முட்டாள்தனம் என்று அவர்கள் கருதும்படியாக நேரிட்டு விடுகிறது. மனித ச்முதாயத்தில் ஒழுக்கமும் நல்ல அரசியலும் ஏற்பட வேண்டுமானால் அயோக்கியத் துரோகிகளை, மானமற்ற இழிமக்களை,நாணயம்-ஒழுக்கமற்ற ஈனமக்களைப் பொது வாழ்வில் தலைகாட்டாமல் அடித்து விரட்டுவதேதான் சரியான வழியாகும்
- தந்தை பெரியார்

Friday, July 11, 2008

நீதிபதிகள்

வக்கீல்கள் தொழிலே பொய், புரட்டுபேசி எப்படியாவது தமது கட்சிக்காரனைசெயிக்க வைக்க வேண்டும் என்பதாகும். கொலை செய்தவனைக் நிரபராதி என்றும், நிரபராதியைக் கொலையாளி என்றெல்லாம் வாதிப்பவர்கள். இவர்களில் இருந்து நீதிபது வந்தால் அவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? நேற்று வரையில் விபச்சாரத் தொழில் புரிந்தவளை அவள் பத்தினியாக இனி நடப்பாள் என்று எதிர்பார்ப்பது போன்றதே யாகும்
.-தந்தைபெரியார்

நீதி என்றால் என்ன?

நல்லவர்களைப் பாதுகாக்க வேண்டும். கஷ்டப்பட்டவர்களைக் கைதூக்கி விட வேண்டும். குறைபாடுகள் உள்ளவர்களின் குறைகளைக் களைய வேண்டும். அதுபோலவே குற்றம் புரிபவர்களைத் தண்டிக்கவும், கொலைகாரர்களைக் கொல்லவும், அக்கிரமக்காரர்களை அழிக்கவும் வேண்டும்.
-தந்தைபெரியார்

Thursday, July 10, 2008

கண்ணாமூச்சி

சின்னவனாய் அன்று...
என் கண்களை கட்டிவிட்டு ஆட்களை கண்டுபிடி என்றார்கள்.
முயன்றேன்... முடியவில்லை
பெரியவனாய் இன்று- கண்களைத் திறந்துகொண்டே ஆட்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு...
முயல்கிறேன்... முடியவில்லை.

- காசி ஆனந்தன்

Wednesday, July 9, 2008

சலவை

உழைக்காதவன் வியர்வையை
கழுவிக்கொண்டிருக்கிறது...
உழைக்கிறவன் வியர்வை
-காசிஆனந்தன்

Saturday, July 5, 2008

மதம்

ஏழைகளின் கோபத்திலிருந்து
பணக்காரர்களை காப்பாற்றும்
எளிய தந்திரத்தின் பெயர்தான்
மதம்
ஆஸ்கார் ஒயில்ட்

Friday, July 4, 2008

அணு ஒப்பந்த அழிச்சாட்டியம்!

கள்ளத் திருடன்பேர் கரிகாற் சோழனா?
கொள்ளைக் காரன் பேர் குமண வள்ளலா?
குடலை உருவி மாலையாய்ப் போடும்

கொள்ளிவாய்ப் பேய் குடியிருக்கும் இடம்பேர்
'வெள்ளை மாளிகை' என்றால் விளங்குமா?
பிணமலை அடுக்கப் பெருக்கத்தின் பேர்தான்

அணு ஒப்பந்தம் அழிச்சாட் டியமா?
அழுகிய மலமே! பழிகார புஷ்ஷே
படுகுழி வெட்டப் பழகிப் பழகிச்

சுடுகாட்டையே நீ தொழுது கிடக்கிறாய்!
உன்சுட்டு விரலுக்கு கட்டுப் பட்டே

பெட்டிப் பாம்பாய் எம்பெருந் தலைகள்
நூறுகோடிப்பேர் தன்மானத்தைக்
கூறுபோட்டு உன்முன் குனிந்து நிற்க
மானங்கெட்ட ஒரு மன்மோகன் சிங்
அலுவாலியா சித்ம்பரஅடிமைக் கும்பல்
அடுத்த வரிசையில் அத்வானி... சின்ஹா...
உன் ஆதிக்க வலையில் வீழ்ந்தபின்
தன்னாதிபத்திய தம்பட்டம் எதற்கு?
அங்கேபார்!
கியூபா நாட்டுக்கிழவன் காஸ்ட்ரோ
பிடரி சிலிர்க்கப் பீரிட் டெழுகிறான்
அர்ஜென்டீனா அரிமா முழக்கம்
கயவனே உன் காதுகள் கிழிக்கும்
ஐ.நா.மன்ற சுவர்கள் அதிர
முதுகெலும்புள்ள சாவேஸ் எழுந்து
சாத்தான் என்றுனைச் சாற்றிய வீரம்
சிவப்புக் கேயுள்ள செம்மாந்தப் பெருமிதம்.
-- தமிழேந்தி
நன்றி.சிந்தனையாளன் ஜூலை 2008

Wednesday, July 2, 2008

மனிதச்சீவன்

சாதியின் பெயரால் உயர்வு தாழ்வு...மதத்தின் பெயரால் வேற்றுமை உணர்ச்சி...தேசத்தின் பெயரால் குரோதத் தன்மை... முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும் கடவுளின் பெயரால் மேல் கீழ் நிலை முதலாகிய அயோக்கியத்தன்மைகள் மனிதச் சீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனிதச்சீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட தீய இழிவான அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லாச் சீவராசிகளை விட மனிதச்சீவன் மூளை விசேடம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட சீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில் எவ்விதத்திலும் மனிதச்சீவன் மற்றசீவப்பிராணிகளை விட உயர்ந்ததல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது
-தந்தைபெரியார்

Tuesday, July 1, 2008

இயக்கம்

ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறதென்கிற தன்மை இருக்கும் வரையிலும், ஒருவன் தினம் ஒருவேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டு வயிற்றைத் தாடவிக்கொண்டு சாயுமான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற தன்மையும் இருக்கிற வரையில், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல்திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக்கொண்டு உல்லாசமாக திரிவதான தன்மை இருக்கின்ற வரையிலும்,பண்க்காரர்க ளெல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுய வாழ்விற்கே எற்ப்பட்டது என்று கருதிக்கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்.மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்விய்க்கத்தை ஒழிக்க யாராலும் முடியாதென்பதே நமது உறுதி.
-தந்தைபெரியார்