Monday, July 28, 2008

பல துறைகளுக்கு

1. மக்களிடம் உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்படவேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி, நேர்மை ஏற்படவேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால்பத்திரிகைகள் பெரிதும் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்படவேண்டுமானால்தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்படவேண்டுமானால் லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறைஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில் துறையில் தொழிலாளர்களிடையே சுமூகமும், நாணயமும்,பொறுப்பும் ஏற்பட வேண்டுமானால் லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் சட்டம் ஒழிக்கப்படவேண்டும்.

7. அய்க்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை நீதிபதியாகநியமிப்பது ஒழிக்கப்படவேண்டும்.
- தந்தை பெரியார்

No comments: