Wednesday, July 2, 2008

மனிதச்சீவன்

சாதியின் பெயரால் உயர்வு தாழ்வு...மதத்தின் பெயரால் வேற்றுமை உணர்ச்சி...தேசத்தின் பெயரால் குரோதத் தன்மை... முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும் கடவுளின் பெயரால் மேல் கீழ் நிலை முதலாகிய அயோக்கியத்தன்மைகள் மனிதச் சீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனிதச்சீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட தீய இழிவான அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லாச் சீவராசிகளை விட மனிதச்சீவன் மூளை விசேடம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட சீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில் எவ்விதத்திலும் மனிதச்சீவன் மற்றசீவப்பிராணிகளை விட உயர்ந்ததல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது
-தந்தைபெரியார்

No comments: