Saturday, July 19, 2008

ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்?

வான் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்?அதன் உச்சிக்கெல்லாம் தங்க முலாம் பூசியவர் யார்? தில்லை நடராஜனுக்கு தங்க கூரை வேய்ந்து தந்தவர் யார்? ஆங்காங்கு ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பித்தந்தவர் யார்? சத்திரம் சாவடி கட்டி வைத்தவர் யார்? ஒரு பார்ப்பானாவது ஒரு செல்லாக் காசாவது கோயில்,குளம்-தான தர்மம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க, இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்? அவர்கள் மட்டும் ஏன் ஒன்றும் செய்யாமலே நம்மை ஏமாற்றி உண்டு பிராமணர்களாய் வாழ வேண்டும்? நாம் ஏன் இன்று கடவுளையே குடுமியை பிடித்து ஆட்டுகிறோம்? ஏன்? அதனால் நல்லது உண்டாகவில்லை. இது சாமியா குழவிக்கல்லா என்று கூடத் துணிந்து கேட்கிறோம் . அது நட்டது நட்ட படியே நின்று கொண்டிருக்கிறதே-"ஆம் உண்மை உண்மை" என்று ஒப்புக்கொள்ளும் தன்மையில். இப்படியெல்லாம் சொல்வதற்காக எந்தச்சாமியும் நம்மீது மான நட்ட வழக்கு தொடரக்காணோமே!
-தந்தை பெரியார்

No comments: