Tuesday, September 4, 2007

திருப்பூர் முகில்ராசு இல்ல மணவிழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

திருப்பூர் கோட்ட அமைப்பாளர் முகில்ராசு சகோதரர் பெ.பிரேம்குமார், ஈரோடு பெருமாள் மலை இராமமூர்த்தி - பாக்கியம் ஆகியோரது மகள் ரேணுகா ஆகியோர் வாழ்க்கை துணை ஒப்பந்த விழா திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச் சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன், செந் தலை கவுதமன், ஆட்சிக்குழு உறுப் பினர் பொள்ளாச்சி மனோகரன், மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்க குமார், ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன், தென்மொழி துரையரசனார், தாய்த்தமிழ்ப் பள்ளி தாளாளர் தங்கராசு, ஈரோடு முத்தமிழ் கலாமன்ற தலைவர் நாராயணசாமி, செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சிக்கு வந்திருந் தவர்களை ஆசிரியை வீ. சிவகாமி வர வேற்றார். முடிவில் முகில்ராசு நன்றி கூறி னார். விழாவை முன்னிட்டு பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.5000/- கழகத் தலைவரிடம் முகில்ராசு வழங்கினார்.

No comments: