Tuesday, September 4, 2007

ரா’ உளவு நிறுவனத்தைச் சார்ந்த முன்னாள் அதிகாரி கைது

‘ரா’ உளவு நிறுவனம் - தமிழ் ஈழப் பிரச்சினையில் தலையிட்டு நடத்திய ‘திருவிளையாடல்களை’ பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிட்டதைத் தொடர்ந்து - ‘ரா’ பற்றிய பல்வேறு செய்திகள் வெளி வருகின்றன. உளவுத் துறை முன்னாள்அதிகாரிகள் இருவர், ‘ரா’வை அம்பலப்படுத்தி எழுதிய 2 நூல்கள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளன. இப்போது ‘ரா’ முன்னாள் அதிகாரி ஒருவர் சென்னையில் கைதாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்று, சி.பி.அய். குற்றம் சாட்டியிருந்தாலும் - உண்மையில் புலிகளுக்கு உதவினாரா? அல்லது ‘ரா’ பற்றிய வேறு தகவல்களை வெளியிடத் திட்டமிட்டாரா என்பது புரியவில்லை. இது பற்றி கொழும்பிலிருந்து வெளிவரும் ‘சண்டே டைம்°’ நாளேடு வெளியிட்ட தகவல்:சென்னையில் நான்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த கௌரி மோகன்தா° என்ற ‘ரா’ உளவு நிறுவன முன்னாள் அதிகாரி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த 1987-1990 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் கொழும்பில் ‘ரா’ அதிகாரியாக அவர் பணியாற்றினார்.கௌரி மோகன்தாசின் வீட்டை சோதனையிட்ட புலனாய்வுத் துறையினர், அங்கு ஆயுதங்கள் தொடர்பிலான விளக்கப் புத்தகங்களையும் ‘ரா’ தொடர்பிலான முக்கியமான உளவு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். சில உளவு ஆவணங்களை விடுதலைப் புலிகளுக்கு கௌரி மோகன்தா° விற்பனை செய்திருக்கக் கூடும் என்று புலனாய்வுத் துறையினர் நம்புகின்றனர். அவரது வங்கிக் கணக்கையும் சோதனையிட உள்ளனர்.இந்திய அமைதிப்படை காலத்தில் பணிபுரிந்த மேலும் 4 ‘ரா’ அதிகாரிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியா மற்றும் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்தியப் புலனாய்வுத் துறையினர் வட்டாரங்கள் கூறின என்று கொழும்பு ஆங்கில ஏடு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: